Tuesday, October 18, 2005

காத்திருப்பது...

நீ வருவதாய்ச் சொல்லவில்லை
எனினும் காத்திருக்கிறேன்
காத்திருந்து காத்திருந்து
பழக்கமாகிவிட்டது
நீ வந்த பிறகும்
காத்திருக்கிறேன்
காத்திருந்தால்
கடவுளே கிடைத்துவிடுகிறான்
நீயா கிடைக்கமாட்டாய்?
நான் காத்திருக்கிறேன்
உனக்காக அல்ல
எனக்காக
வாழ்க்கை என்பதே
காத்திருத்தல்தான்
அந்த தெய்வீகக் காதலியைச்
சந்திப்பதற்காக!
-'இது சிறகுகளின் நேரம்'(கவிக்கோ அப்துல் ரகுமான்)

No comments: