Monday, November 17, 2008

தாய்



மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையால்
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!

ஆக்கம்: பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி மலரில் வந்தது(ஆனந்தவிகடனிலும் பிரசுரம்)

1 comment:

pradeepkumar said...

Kavithai sooper vel.